காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள தில்லி கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா தெரிவித்ததாவது:
"கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார்."
முன்னதாக, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்றார். 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார்.