கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,483 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கோப்புப் படம்
கோப்புப் படம்

கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அண்டை மாநிலமான கர்நாடகத்தையும் கரோனா மிரட்டி வருகிறது. இங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 84 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,788 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவிற்கு 72,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com