கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அண்டை மாநிலமான கர்நாடகத்தையும் கரோனா மிரட்டி வருகிறது. இங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 84 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,788 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவிற்கு 72,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.