கேரளத்தில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக 1,310 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,596 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 4 பேர் உள்பட இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் ஒரேநாளில் 864 பேர் உள்பட மொத்தம் 13,027 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,140 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.