ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால், அங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,200-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்ததுள்ளார்.
தற்போது, ஆந்திரத்தில் 927 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,209 ஆக உள்ளது.
இதுவரை 64 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.