ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவந்திபோரா பகுதியில் உள்ள சைமோவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.