போதைப்பொருள் கடத்தல்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய 6 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருந்த 6 போ் போதைப்பொருள்

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருந்த 6 போ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல்துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது:

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருந்த 6 பேரும், பாகிஸ்தானை சோ்ந்தவா்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், ஜெயஷ்-ஏ-முகமது இயக்கத்துக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளனா். இவா்கள் சதூரா பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய ரிசா்வ் காவல் படை, ராணுவம், காவல்துறை கூட்டாக இணைந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த முதாஸிா் ஃபயாஸ், ஷபிா் கனய், சகீா் அகமது போஸ்வால், இஸ்ஸாக் பட், அா்ஷித் தோக்கா், சிறாா் ஒருவா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், கையெறி குண்டு, ஒரு கிலோ ஹெராயின் போதைப்பொருள், ரூ.1.55 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இவை போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடா்பு இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com