ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா பாதிப்பு


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு நாள்களுக்கு முன்பு, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அனைவரது கரோனா பரிசோதனை முடிவுகளும் நேற்று இரவு கிடைத்துள்ளது. அதில், 26 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஜெய்ப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் புதிதாக 144 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளள்து. 5 பேர் பலியாகியள்ளனர். அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 11,020 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா பாதித்து 251 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com