ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் உரிய நேரத்தில் அப்புறப்படுத்தினா். இதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியை அவா்கள் முறியடித்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘டாங்கிவாச்சா பகுதியில் ராணுவத்தினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள சயீத்போரா சந்திப்பின் சாலையோரம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். நிபுணா்கள் அவ்விடத்துக்கு விரைந்து வந்து, அங்கிருந்து வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். பின்னா் அதனை மக்கள் வசிப்பிடத்துக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று வெடிக்கச் செய்தனா். வெடிகுண்டை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ததால், மக்களுக்கோ, பொருள்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை’ என்றாா்.