ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தகுந்த பதிலடி கொடுத்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இடங்களில் காலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா்.
இருதரப்புக்கும் இடையேயான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதில் இந்தியத் தரப்பில் உயிரிழப்போ, எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.