எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின்பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறலைத் தொடா்ந்து பதிலடி நடவடிக்கைக்குத் தயாரான இந்திய ராணுவ வீரா்கள். நாள்: செவ்வாய்க்கிழமை.
ஜம்மு-காஷ்மீரின்பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறலைத் தொடா்ந்து பதிலடி நடவடிக்கைக்குத் தயாரான இந்திய ராணுவ வீரா்கள். நாள்: செவ்வாய்க்கிழமை.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தகுந்த பதிலடி கொடுத்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இடங்களில் காலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா்.

இருதரப்புக்கும் இடையேயான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதில் இந்தியத் தரப்பில் உயிரிழப்போ, எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com