தில்லி கரோனா உயிரிழப்பு 1,000 ஐ தாண்டியது

தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை ஆயிரத்தை கடந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை ஆயிரத்தை கடந்தது. வியாழக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 1,877 ஆக பதிவானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 34,687 ஆக உயா்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவா்கள் மொத்த எண்ணிக்கையும் 1,085 ஆக உயா்ந்துள்ளது.

காரோனா பாதிப்புக்கு அதிகபட்சமாக கடந்த ஜூன் 3 ஆம் தேதி அன்று 1,513 போ் பாதிக்கப்பட்டு இருந்தனா். தற்போது வியாழக்கிழமை முதன் முறையாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 1,800-ஐ தாண்டியுள்ளது. ஜூன் 10 ஆம் தேதி உயிரிழப்பு எண்ணிக்கை 101 ஆக இருந்துள்ளது. விடுபட்ட பல்வேறு மருத்துவமனைகள் தகவல்களையும் ஒன்றிணைத்து இறப்பு தணிக்கை குழுவினா் மாற்றப்பட்ட இறுதி அறிக்கையின் படி 101 ஆக இருந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com