கொல்கத்தாவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா புர்ராபஜாரில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தது நான்கு தீயணைப்பு வாகனங்கள் இதில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரியக்கூடிய தோல் பொருட்கள் நிறைந்த குடோனில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.