தெற்கு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ஜடூரா நிபோரா பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தெற்கு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ஜடூரா நிபோரா பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

புலனாய்வுத் துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும், இராணுவமும் இந்தப் பகுதியை சுற்றிவளைத்தனர். மறைந்திருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் ரெபன் பிஞ்சுரா மற்றும் சுகூ கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த மூன்று மோதல்களில் குறைந்தது 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com