கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள்: ரயில்வே தகவல்

கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ரயில் பெட்டிகள்
ரயில் பெட்டிகள்

புது தில்லி: கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக   உள்வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 204 ரயில் பெட்டிகள் 4 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் உத்தரபிரதேசத்திற்கு 70 பெட்டிகளும், தில்லிக்கு 54 பெட்டிகளும், தெலங்கானாவுக்கு 60 பெட்டிகளும் மற்றும் ஆந்திராவுக்கு 20 ரயில்பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com