ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது: புதிதாக 115 பேருக்குத் தொற்று

ராஜஸ்தானில் புதிதாக 115 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 13,096 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 115 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 13,096 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பரத்பூர் (68), ஜெய்ப்பூர் (21), ஜுன்ஜுனு (08), டோங்க் (06), தௌசா (04), சிரோஹி (04), ஜலவர் (03) மற்றும் பில்வாரா (01) மாவட்டங்களிலிருந்து தொற்று பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,794 பேர் நோயிலிருந்து மீட்டுள்ளனர். 9,567 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com