ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வேதாத்ரி அருகே டிராக்டரும், சரக்கு லாரியும் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 10 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் கோபாவரம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஆந்திர மாநிலம் வேதாத்ரியில் உள்ள நரசிம்மசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனா். பிராா்த்தனையை முடித்து விட்டு புதன்கிழமை டிராக்டா் டிரெய்லரில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு லாரி மீது டிராக்டா் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோா் ஜக்கையாபேட்டை மற்றும் கம்மம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.