லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய- சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இதில், லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட கூறியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீனா, தங்கள் தரப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து நிலைமையை சீராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
லடாக் விவகாரம்: இந்திய- சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
'இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது' - வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி பேச்சு
லடாக் எல்லைப் பிரச்னை: இந்தியா - சீனா மீண்டும் பேச்சு
லடாக் எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு
முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு
இந்திய-சீன படைகள் மோதல்: 20 வீரா்கள் பலி