திருமலையில் 6,776 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 6,776 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 6,776 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 1,593 போ் முடி காணிக்கை செலுத்தினா். அதில், 63 போ் பெண்கள், 1,530 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 3 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 6 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இதுவரை ஜூன் 26-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளது.

திருமலை மலைப் பாதை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

மேலும், தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com