திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கரோனா தொற்றால் இன்று புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், கேரளத்தில் புதிதாக 118 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,380 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.