கேரளம், கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளம்:
கேரளத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 87 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 36 பேர். அங்கு மொத்தம் 1,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,566 பேர் குணமடைந்துள்ளனர்.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 416 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,391 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.