கரோனா நோய்க்கு கிளென்மார்க் நிறுவனத்தின் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

கரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா நோய்க்கு கிளென்மார்க் நிறுவனத்தின் மருந்து
கரோனா நோய்க்கு கிளென்மார்க் நிறுவனத்தின் மருந்து

கரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல்  மருந்து நிறுவனத்தின் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. FabiFlu என்ற பெயர் கொண்ட மருந்தை கரோனா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை ஒரு மாத்திரை ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில், ஃபேபிஃப்ளூ (FabiFlu) மருந்துதான், முதல் முறையாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முதல் மருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து என்ற நிலையில் உள்ளது. அதன்படி, கரோனா பாதித்த ஒருவருக்கு முதல் நாளில் 1,800 மில்லி கிராம் மருந்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கும், தொடர்ந்து அடுத்த நாள் முதல் 14 நாள்களுக்கு தினமும் இரண்டு வேளை என்ற வகையில் 800 மில்லி கிராம் மருந்தையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

இந்த மருந்து தற்போது மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையகங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்த, மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை தான் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், எங்கள் நிறுவனத்துக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது. நாட்டில் தற்போது கரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் ஒரு அழுத்தத்தை நிச்சயம் இந்த மருந்து சரி செய்யும் என்று கிளென்மார்க் பார்மாக்யூடிகல் நிர்வாகி மற்றும் செயல் இயக்குநர் கிளென் சல்டான்ஹா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com