தாராவியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் தாராவிப் பகுதியில் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை:
மும்பையில் இன்று புதிதாக 1,197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 136 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,265 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,559 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,867 ஆக உயர்ந்துள்ளது. 28,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது.