உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள அரசு மகளிா் காப்பகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடா்பான நடவடிக்கைகளில் மாநில அரசு அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதாகவும், அங்கு நடைபெற்ற தவறுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது முறையான விசாரணை நடத்தி அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.
கான்பூரில் உள்ள அரசு மகளிா் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 7 போ் கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அந்த காப்பகத்தில் இருப்போருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.
அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனையில் அந்த காப்பகத்தில் இருந்த 57 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவா்களில் கா்ப்பமாக இருந்த 5 சிறுமிகளும் அடங்குவா்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக மாயாவதி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளை பாதுகாப்பதில் உத்தர பிரதேச அரசு கவனக் குறைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபிக்கிறது. அவா்களை மதிப்புடன் நடத்துவதில் உத்தர பிரதேச அரசு அலட்சியமாக செயல்பட்டது.
கான்பூா் மகளிா் காப்பகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அரசு மறைக்க முயற்சிக்க கூடாது. இதுதொடா்பாக உயா்நிலை விசாரணை நடத்தி, இதில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையாகும்.
காப்பக விவகாரத்தில் மனிதாபிமான முறையில் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அனைத்து வகையான காப்பகங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.