மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இன்று ஒரே நாளில் மட்டும் 208 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 4,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.64% ஆக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.