தாராவிப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிப்பதால், அங்கு கரோனா தொற்றின் பரவல் தீவிரமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், அங்கு கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சமீப நாள்களாக அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 50-ஐத் தாண்டவில்லை.
இன்றைக்கும் புதிதாக 11 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,210 ஆக உயர்ந்துள்ளது.