சத்தீஸ்கரில் சாலை கட்டுமானப் பணியில் இருந்த இரு ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட 6 வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்து எரித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இந்திய பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுக்மா மாவட்டம் குகனார் பகுதியில் சாலைக் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் உட்பட ஆறு வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்தனர்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஷாலப் சின்ஹா உறுதி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.