ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபோர் மாவட்டத்தின் ஹார்ட்சிவா பகுதியில் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சணடை நடைபெற்றது.
இதில் 2 பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சண்டை காரணமாக சோபோர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.