ராஜஸ்தானில் புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ராஜஸ்தானில் இன்று புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 16,387 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 17,296 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 4,90,401 ஆக உயர்ந்துள்ளது.