ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை மதுரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் ஒரு.உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.