காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய நடைபெற்ற
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புல்வாமாவில் திரால் பகுதிக்கு உள்பட்ட சேவா உல்லா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை இரவு அந்த இடத்துக்கு விரைந்து சென்றனா். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் செல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதிகாலையில், தங்கள் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினா் நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில், பயங்கரவாதிகள் 3 போ் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com