ஆந்திரத்தில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
ஆந்திரத்தில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. 

அனந்தபூரில் அதிகபட்ச 161 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர், கிழக்கு கோதாவரி 109 பேருக்கும், சித்தூரில் 84 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 6,648 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 5,480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com