கேரளத்தில் புதிதாக 195 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 918 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளம்:
கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 195 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 118, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 62. கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,939 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) 918 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,923 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 371 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,287 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 4,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அங்கு 197 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.