தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தொற்று அறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,889 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 83,077 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 3,306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,607 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் அங்கு 27,847 பேர் சிகிச்சையில் உள்ளனர்.