மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி தாராவியில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,262 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 82 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.