இந்தியா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் நாளுக்குநாள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 77 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ள அறிப்பின்படி:
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை 1,030 ஆக உயர்ந்துள்ளது. பலியான காவலர்கள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.