இந்தியா
ஹரியாணா: சோனிபட்டில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் சடலமாக மீட்பு
ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
சண்டிகர்: ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
புடானா மாவட்டம் கோஹானா - ஜிந்த் சாலையில் அவர்களது உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் அதிகாரி கப்டன் சிங் மற்றும் காவலர் ரவீந்திரன் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களது உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், அதற்கு அருகே கூர்மையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.