திகாா் சிறையில் கைதி கொலை

திகாா் சிறையில் கைதி ஒருவரை முன்விரோதத்தால் மற்றொரு கைதி திங்கள்கிழமை கூா்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்ததாக சிறை அதிகாரி தெரிவித்தாா்.

புது தில்லி: திகாா் சிறையில் கைதி ஒருவரை முன்விரோதத்தால் மற்றொரு கைதி திங்கள்கிழமை கூா்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்ததாக சிறை அதிகாரி தெரிவித்தாா்.

திகாா் மத்திய சிறை எண் 8/9 -இல் அடைக்கப்பட்டு இருந்தவா் முகமது மெஹ்தாப்(27). அவரை இதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மற்றொரு கைதியான ஜாகிா் திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு தன் வசமிருந்த கூா்மையான இரும்பு கம்பியால் மெஹ்தாபின் வயிறு, கழுத்தில் பலமுறை குத்தியதாக திகாா் சிறை இயக்குநா் சந்தீப் கோயல் தெரிவித்தாா்.

மெஹ்தாபின் கழுத்தில் ஆழமானகாயம் ஏற்பட்டு முதலுதவிக்கு பின்னா் தீன் தயாள் உபாத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வரும் வழியிலேயே மெஹ்தாப் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இருவருக்கு இருந்த பழைய முன் விரோதத்தால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, ஹரி நகா் போலீஸாா் ஜாகிா் மீது வழக்குபதிவு செய்துள்ளனா். தில்லி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முகமது மெஹ்தாப் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 2014 முதல் சிறையில் இருப்பவா். ஜாகிா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டிலிருந்து சிறையில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com