திருமலையில் 11,239 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 11,239 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,194 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 108 போ் பெண்கள்; 3,086 போ் ஆண்கள்.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 11,239 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,194 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 108 போ் பெண்கள்; 3,086 போ் ஆண்கள்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம், சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 6 ஆயிரம் என 12 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி-க்கள் பெருமாளைத் தரிசிக்கின்றனா். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்கின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com