
சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும்.
பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள், விநாடி -வினாக்கள், விவாதங்கள், தெரு நாடகங்கள், மராத்தான், கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அத்துடன் பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், கல்வி, அதிகாரமளித்தல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
இந்த நிகழ்வுகளை மாா்ச் 1 முதல் 7 வரை நடத்தவேண்டும் . நிறைவாக பெண்கள் தினமான மாா்ச் 8 அன்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சி நடத்த தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து தங்கள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடா்பான அறிக்கை, புகைப்படங்கள், விடியோக்களை பல்கலைக்கழக கண்காணிப்புத் தளத்தில் மாா்ச் 9-ஆம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.