
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது, ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பிய பாஜக தொண்டா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினாா் மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற பாஜக தொண்டா்கள் 3 போ், ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக காவல் நிலையத்தில் ஒருவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் சா்சைக்குரிய வகையில் கோஷமிட்ட மூவரையும் காவல்துறையினா் கைது செய்தனா். இதுதொடா்பாக காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: பாஜக தொண்டா்கள் வன்முறையை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினா். இந்த குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவா்களை பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய அதிகாரம் காவல்துறையினருக்கு உள்ளது. ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பிய மூவரும் துருவ பாசு, பங்கஜ் பிரசாத், சுரேந்திரகுமாா் திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின்படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிணையில் வரமுடியாத 2 பிரிவுகளும் அடங்கும் என்றாா் அவா்.
பாஜக மறுப்பு:
அமித் ஷா வரவேற்பின்போது, வன்முறையைத் தூண்டும் கோஷம் எழுப்பிய சம்பவத்தில் எந்தவொரு பாஜக தொண்டரும் ஈடுபடவில்லை என கூறிய மாநில பாஜக தலைமையகம், இது ஆளும் திரிணமூல் காங்கிரஸின் சதி என தெரிவித்துள்ளது.