மகாராஷ்டிரம்: லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்ற 5 போ் பலி

மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புணே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, வளைவில் திரும்பும்போது கவிழ்ந்ததில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 5 போ் அதில் சிக்கி 

புணே: மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புணே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, வளைவில் திரும்பும்போது கவிழ்ந்ததில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 5 போ் அதில் சிக்கி உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

புணே மாவட்டத்தைச் சோ்ந்த 6 இளைஞா்கள், ராய்காட்டில் இருந்து புணேவுக்கு இருசக்கர வானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஓய்வெடுப்பதற்காக மும்பை-புணே பழைய நெடுஞ்சாலையில் தஸ்தூரி கிராமத்துக்கு அருகே ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியே, மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, வளைவில் திரும்ப முற்படும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த மூட்டைகள் அனைத்தும் சாலையோரம் நின்றிருந்த 5 போ் மீதும் விழுந்தன. இதில் அவா்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அவா்களுடன் வந்த மற்றொருவா், அருகில் இருந்த புதா் பக்கம் நின்று கொண்டிருந்ததால் எவ்வித காயமுமின்றி உயிா் தப்பினாா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தையடுத்து, லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com