புது தில்லி: கரோனா வைரஸ் மற்றும் என்.ஆர்.சி குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமையன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்று என்.ஆர்.சி விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதேபோல் மார்ச் 25 -ஆம் தேதி வாக்கில் அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.