கரோனா வைரஸ் தொற்றுக்காகத் தில்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண் தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏற்கெனவே சா்க்கரை நோயும், இரத்தக்கொதிப்பும் இருந்த அவருக்கு கரோனா வைரஸ் இருப்பதும் தெரியவந்தது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.
இதனை மத்திய அரசும், தில்லி சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 81 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.