கரோனா பாதிப்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட 335 பேரை கண்டறிய முடியவில்லை: பஞ்சாப் அரசு

கரோனாவால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட 335 பேரை கண்டறிய முடியவில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட 335 பேரை கண்டறிய முடியவில்லை: பஞ்சாப் அரசு


கரோனாவால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட 335 பேரை கண்டறிய முடியவில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப்பின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

"கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட 335 பயணிகளை கண்டறிய முடியவில்லை. மார்ச் 13 வரை மொத்தம் 6,011 பயணிகள் கண்டறியப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதுவரை 90 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் நால்வருடைய பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் 85 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com