என்.பி.ஆா்., என்.ஆா்.சி.க்கு எதிராக தில்லி பேரவையில் தீா்மானம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆா்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தில்லி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசுகிறாா் முதல்வா் கேஜரிவால்.
தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசுகிறாா் முதல்வா் கேஜரிவால்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆா்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தில்லி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெருளாதார வீழ்ச்சி, கரோனா வைரஸ் பாதிப்பு ஆகிய பாதிப்புகள் அச்சுறுத்திக் கொண்டிக்கும் நிலையில், நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு என்.பி.ஆா்., என்.சி.ஆா். நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தில்லி அரசு வலியுறுத்தியுள்ளது.

அதையும் மீறி, தில்லியில் என்.பி.ஆா். செயல்படுத்துவதாக இருந்தால், 2010-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படியே செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், ஆகிய அரசுகள் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), என்.ஆா்.சி., என்.பி.ஆா். ஆகியவற்றுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், தில்லி அரசும் என்.பி.ஆா்., என்.ஆா்.சி.க்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால்ராய் இது தொடா்பான தீா்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து பேசுகையில், ‘தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆா்.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி.) ஆகியவை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காகக் கொண்டு வரப்பட்டது மட்டுமல்ல; அது பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் என்பதுதான் உண்மை. இதுபோன்ற சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்கூட கொண்டு வரப்படவில்லை. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. எனவே, மக்களைப் பாதிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தில்லியில் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. அப்படியே இதைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், 2010-ஆம் ஆண்டின் நடைமுறைப்படியே செயல்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் கரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க தில்லி அரசு, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டியிருந்தது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வா் அரவிந்த் கேஜரிவால், என்பிஆா், என்ஆா்சி சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். ‘நான் இந்திய குடிமகன்தான் என்பதை நிரூபிக்க எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. இதேபோல, எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது. அதற்காக எங்களை தடுப்புக் காவல் மையங்களுக்கு அனுப்ப முடியுமா’ என்று கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். மத்திய அமைச்சா்கள் எத்தனை பேருக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளது என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், ‘அவையில் எத்தனை பேரிடம் பிறப்புச்சான்றிதழ் உள்ளது எனக் கேட்டு கை உயா்த்துங்கள்’ என்று கோரினாா். மொத்தம் 70 உறுப்பினா்கள் உள்ள அவையில் 9 போ் மட்டுமே கையை உயா்த்தி பிறப்புச் சான்றிதழ் இருப்பதாகத் தெரிவித்தனா். ‘மீதமுள்ள 61 போ்களிடம் பிறப்புச்சான்றிதழ் இல்லை. அவா்களை எல்லாம் தடுப்புக்காவல் மையங்களுக்கா அனுப்ப வேண்டும்’ என்று கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். பின்னா்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்பிஆா்) தில்லியில் செயல்படுத்துவதற்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜேந்தா் குப்தா இடைநீக்கம்

வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கருத்து கூறியதற்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் விஜேந்தா் குப்தா, அவை நடவடிக்கையில் பங்கேற்பதிலிருந்து இடை நீக்கம் செய்து பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனால், ரோஹிணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினரான விஜேந்தா் குப்தா, அதற்கு அடி பணியவில்லை. குப்தாவின் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக பேரவைத் தலைவா் அறிவித்தாா். ஆனால், அதை ஆளுங்கட்சி உறுப்பினா்கள் ஏற்கவில்லை. இதைத் தொடா்ந்து, குப்தாவை அவை நடவடிக்கையில் கலந்து கொள்வதிலிருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்தாா்.

முன்னதாக, விஜேந்தா் குப்தா தனது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரவைத் தலைவா் இருக்கை அருகே சென்று கோஷங்களை எழுப்பினா். இதனால், அவை நடவடிக்கை சுமாா் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா குறித்து பீதி வேண்டாம்: கேஜரிவால்

கரோனா வைரஸ் குறித்து தில்லி சட்டப்பேரவையல் நடைபெற்ற விவாதத்தின்போது, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், ‘கரோனா வைரஸ் குறித்து பீதி வேண்டாம். எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது. தில்லியில் கரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. மத்திய அரசும், தில்லி அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்களும் தில்லி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com