எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோடே செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினா். சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com