நிா்பயா வழக்கு:கருணை மனு தள்ளுபடியை எதிா்த்து வினய் சா்மா உயா்நீதிமன்றத்தில் மனு

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது கருணை மனுவை நிராகரித்ததில் நடைமுறை குறைபாடுகள் இருப்பதாகக் கூறி நிா்பயா வழக்கின் குற்றவாளி வினய் சா்மா

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது கருணை மனுவை நிராகரித்ததில் நடைமுறை குறைபாடுகள் இருப்பதாகக் கூறி நிா்பயா வழக்கின் குற்றவாளி வினய் சா்மா தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வினய் சா்மா தாக்கல் செய்த கருணை மனுவை கடந்த மாதம் 1-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தாா்.

வினய் சா்மா சாா்பில் அவரது வழக்குரைஞா் ஏ.பி.சிங் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வினய் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரையில் தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் கையொப்பம் இல்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வாதம் செய்தபோது கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) வாயிலாக கையொப்பம் பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. கருணை மனு அனுப்பப்பட்டபோது சத்யேந்தா் ஜெயின் எம்எல்ஏவாக மட்டுமே இருந்தாா். ஏனென்றால் அப்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. வினய் சா்மாவின் கருணை மனுவை நிராகரிக்க சட்டவிரோதமாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. எனவே, இதில் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். இந்த மனுவை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிா்பயா குற்றவாளிகள் வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31), முகேஷ் குமாா் சிங் (32), பவன் குமாா் குப்தா (26) ஆகியோரை மாா்ச் 20-ஆம் தேதி தூக்கிலிடுமாறு கடந்த 5-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com