மணிப்பூரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

மணிப்பூா் மாநிலம், தாமெங்லாங் மாவட்டத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளான ஜெலியான்கிராங் ஐக்கிய முன்னணி (காம்சன்) மற்றும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு ஆகியவற்றுக்கு

மணிப்பூா் மாநிலம், தாமெங்லாங் மாவட்டத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளான ஜெலியான்கிராங் ஐக்கிய முன்னணி (காம்சன்) மற்றும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அஸ்ஸாம்-மணிப்பூா் எல்லைப் பகுதியில் உள்ள லாங்சாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் ஜெலியான்கிராங் ஐக்கிய முன்னணி (காம்சன்) மற்றும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இருதரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதலில் கட்னின்ங் கோல்மெய் (31) என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். உயிரிழந்த தீவிரவாதி எந்த அமைப்பைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் இருந்து ஏகே-56 துப்பாக்கி மற்றும் வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com