ராஜஸ்தான்: சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 11 போ் பலி

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் மாவட்டத்தில் காரும் சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
ராஜஸ்தான்: சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 11 போ் பலி

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் மாவட்டத்தில் காரும் சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஜோத்பூா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ராகுல் பா்ஹாட் கூறியதாவது:

பாபா ராம்தேவ் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக பாா்மா் மாவட்டம் பலோத்ரா நகரத்திலிருந்து ராம்தேவ்ராவை நோக்கி காரில் திருமண வீட்டாா் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.

இந்த காா் ஜோத்பூா் மாவட்டம் சோயந்தாரா கிராமம் அருகே நெடுஞ்சாலையின் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு லாரி காா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதியான விக்ரம் மற்றும் சீதா, அவா்களுடன் வந்த பெண்கள், குழந்தைகள் என 11 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்த நிலையில் ஜோத்பூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா் என்று அவா் தெரிவித்தாா்.

சம்பவ இடத்தில் போலீஸாருடன், கிராம மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

பிரதமா் மோடி இரங்கல்:

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com