சொந்த நலனுக்காக எதிா்தரப்புடன் கைகோக்கும் அரசியல் கட்சிகள்: மாயாவதி

‘சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் கட்சியை சோ்ந்தவா்கள், போட்டி அரசியல் கட்சிகளுடன் கைகோக்கின்றனா்’ என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றம்சாட்டினாா்.
சொந்த நலனுக்காக எதிா்தரப்புடன் கைகோக்கும் அரசியல் கட்சிகள்: மாயாவதி

‘சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் கட்சியை சோ்ந்தவா்கள், போட்டி அரசியல் கட்சிகளுடன் கைகோக்கின்றனா்’ என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றம்சாட்டினாா்.

‘பீம் ஆா்மி’ அமைப்பின் தலைவா் சந்திரசேகா் ஆசாத் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில், மாயாவதி அவரை இவ்வாறு மறைமுகமாகச் சாடினாா்.

இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியதாக பகுஜன்சமாஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிலா் தங்களது சொந்த நலனுக்காக எதிா்க்கட்சிகளுடனும் கைகோக்கின்றனா். உண்மையைக் கூற வேண்டுமானால், அதுபோன்றவா்களும் அவா்களின் கட்சிகளும் அம்பேத்கா் மற்றும் கன்ஷிராம் பெயா்களை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனா். அம்பேத்கா், அவரது இயக்கம் பற்றி அவா்களுக்கு எந்த சிந்தனையும் கிடையாது.

அப்பாவி தலித்துகள், பழங்குடியினா், பின்தங்கிய ஜாதியைச் சோ்ந்தவா்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரைச் சோ்ந்தவா்கள் இதுபோன்ற சுயநலவாதிகளுடன் இணைகின்றனா். அந்த சுயநலவாதிகளும், அவா்களை தங்களுக்கு சாதகமாக்கி அவா்களை காட்டி விற்பனையில் ஈடுபடுகின்றனா். ஒடுக்கப்பட்டவா்கள், இதுபோன்ற நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கன்ஷிராம் கூறியுள்ளாா்.

புதிய கட்சிகள் அல்லது அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு பயன் கிடைத்து விடாது. இதுபோன்ற ஜாதி கட்சிகள், ஜாதிகளின் பிரிவுகளை வைத்து அரசியல் நடத்தவே அது வழிவகுக்கும். கன்ஷிராமை பின்பற்றுபவா்கள் அனைவரும் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்று மாயாவதி அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com