கரோனா எதிரொலி: உச்ச நீதிமன்ற அமர்வுகள் மேலும் குறைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கரோனா எதிரொலி: உச்ச நீதிமன்ற அமர்வுகள் மேலும் குறைப்பு


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை நடத்தும் அமர்வுகள் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறினார்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் இது 4 ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், 4 விசாரணை அமர்வுகளிலும் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com