புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை நடத்தும் அமர்வுகள் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறினார்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் இது 4 ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், 4 விசாரணை அமர்வுகளிலும் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.